தெய்வம் துணை கொள்
ஆ. இரவிகார்த்திகேயன் கவிதைகள்
வேலை இல்லா பட்ட(டா )தாரி
பாசன ஏரியை
பட்டா போட்டதால்
காவல் வேலையை இழந்தார்
அய்யனார்.
மொழிபெயர்ப்பு
மசூதி ஒலிபெருக்கி
தாய்மொழி இழப்பு
எல்லா புகழும் இறைவனுக்கா...?
ஆரியக் கூத்து
தமிழை மறந்த
தென்னாடுடைய சிவன்
தில்லையில்...
ஆனந்த தாண்டவத்தில்
தீட்சிதர்கள்!
நன்கொடை
தமிழ்க் குழந்தைகளை
ஆங்கிலம் படிக்க
அழைத்தார்கள்.
மேரி மாதா
கவலையுடன்
பள்ளிக்கு வெளியில்
குழந்தை யேசுவுடன் நின்றாள்.
வேத வாக்கு
ஈசுவரன் கோவிலில்
நெய்பொங்கல் காணாதவர்கள்
ஏழை மாரியம்மன் கோவிலில்
கூழ் குடித்தார்கள்.
"சிவன் சொத்து குல நாசம்"
அடையாளம்
புத்தனின் போதனை
நிறைந்த
போர்க்கருவிகள்
தமிழனின் புதைகுழியில்..
அவளா!
அபயம் என
தீ மிதித்தவர்களை
அலங்காரத்தோடு
வேடிக்கைப் பார்த்தாள்
பாஞ்சாலி.
இழப்பு
கருமணியும் வளையலும்
படையலும்
வேண்டாம்!
காடு எங்கே?
ஒற்றைப் பனைமரத்தில்
காட்டேரி.
வேலை இல்லா பட்ட(டா )தாரி
பாசன ஏரியை
பட்டா போட்டதால்
காவல் வேலையை இழந்தார்
அய்யனார்.
மொழிபெயர்ப்பு
மசூதி ஒலிபெருக்கி
தாய்மொழி இழப்பு
எல்லா புகழும் இறைவனுக்கா...?
ஆரியக் கூத்து
தமிழை மறந்த
தென்னாடுடைய சிவன்
தில்லையில்...
ஆனந்த தாண்டவத்தில்
தீட்சிதர்கள்!
நன்கொடை
தமிழ்க் குழந்தைகளை
ஆங்கிலம் படிக்க
அழைத்தார்கள்.
மேரி மாதா
கவலையுடன்
பள்ளிக்கு வெளியில்
குழந்தை யேசுவுடன் நின்றாள்.
வேத வாக்கு
ஈசுவரன் கோவிலில்
நெய்பொங்கல் காணாதவர்கள்
ஏழை மாரியம்மன் கோவிலில்
கூழ் குடித்தார்கள்.
"சிவன் சொத்து குல நாசம்"
அடையாளம்
புத்தனின் போதனை
நிறைந்த
போர்க்கருவிகள்
தமிழனின் புதைகுழியில்..
அவளா!
அபயம் என
தீ மிதித்தவர்களை
அலங்காரத்தோடு
வேடிக்கைப் பார்த்தாள்
பாஞ்சாலி.
இழப்பு
கருமணியும் வளையலும்
படையலும்
வேண்டாம்!
காடு எங்கே?
ஒற்றைப் பனைமரத்தில்
காட்டேரி.