Monday 21 February, 2011

பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீரவணக்கம்!

வீரவணக்கம்! வீரவணக்கம்!
பார்வதி அம்மாள்  அவர்களுக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்
!

 
தாயே!
மரணப்படுக்கையில்
உன்
உடல்வலியின் முக்கல் முனகல்கூட
ஆட்சியாளர்களுக்கு
புலியின் உறுமலாய் உணர்த்தியது!
வீரம் விளைந்த
தாய்மண்ணே!
நீ விழுந்தபோது
போராளிகள் மட்டுமல்ல
புறநானூற்றுத் தமிழ் அறிந்தவர்கள் அனைவரும்
கண்ணீர் சிந்துகின்றனர்,
இழப்பு
எங்கள் இனத்திற்கு
என்று!

ஆ.இரவிகார்த்திகேயன்
விழுப்புரம்.
தி.பி.2042 கும்பம்  8 (20-02-2011)