வீரவணக்கம்! வீரவணக்கம்!
பார்வதி அம்மாள் அவர்களுக்குவீரவணக்கம்! வீரவணக்கம்!
தாயே!
மரணப்படுக்கையில்உன்
உடல்வலியின் முக்கல் முனகல்கூட
ஆட்சியாளர்களுக்கு
புலியின் உறுமலாய் உணர்த்தியது!
வீரம் விளைந்த
தாய்மண்ணே!
நீ விழுந்தபோது
போராளிகள் மட்டுமல்ல
புறநானூற்றுத் தமிழ் அறிந்தவர்கள் அனைவரும்
கண்ணீர் சிந்துகின்றனர்,
இழப்பு
எங்கள் இனத்திற்கு
என்று!
ஆ.இரவிகார்த்திகேயன்
விழுப்புரம்.
தி.பி.2042 கும்பம் 8 (20-02-2011)